தேடல் தொடங்கியதே..

Saturday 24 November 2012

கீழக்கரை இஸ்லாமியா பள்ளியின் ஏற்பாட்டில் மாணவர்கள் 'கல்விச் சுற்றுலா' - இன்று (24.11.2012) டார்ஜிலிங், கொல்கத்தா பயணம் - பிள்ளைகளை வழியனுப்ப பள்ளியில் குவிந்த பெற்றோர்கள் !

பள்ளி மாணவர்கள் வருடம் முழுவதும், பள்ளிப் பாடங்களை ஏட்டளவில் படித்துப் படித்து களைத்துப் போன கண்களுக்கு, கல்விச் சுற்றுலா என்பது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. பள்ளிகளில் அழைத்து செல்லும் இது போன்ற சுற்றுலாக்களால் மாணவர்களின் மனதிற்கு நிம்மதியையும், புத்துணர்வையும் அளிப்பதோடு, அவர்களின் மன இறுக்கத்தையும் வெகுவாக குறைக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை இது போன்று கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்கள், இறுதியாண்டு தேர்வுகளில், அதிக மதிப்பெண்கள் பெற்று, மிக சிறப்பாக தேர்ச்சி பெறுவதாக கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.



இதனை கருத்தில் கொண்டு, இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் முகைதீன் இபுராகீம் அவர்கள் இந்த சுற்றுலாவுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். அதற்கான சுற்றுலா பயணம், இன்று காலை 9 மணியளவில், தெற்குத் தெரு இஸ்லாமியா பள்ளிகள் வளாகத்தில் இருந்து இனிதே துவங்கியது. இதில் இப்பள்ளியின் 8 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை உள்ள 91 மாணவர்கள் மற்றும் 8 ஆசிரியப் பெருந்தகைகள், ஆசிரியர் திரு.அருள் டேவிஸ் ராஜ் அவர்கள் தலைமையில் சென்றுள்ளனர். முன்னதாக, தெற்குத் தெரு பள்ளியின் தலைமை இமாம் அமானி ஆலீம் அவர்கள் பயணத்திற்கான துஆ வை ஓதி இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். 







இது குறித்து கல்விச் சுற்றுலா செல்லும் மாணவர் செய்யது ரசீன் அகமது அவர்கள் கூறும் போது " நண்பர்களுடனும், ஆசிரியர்களுடனும் சேர்ந்து கல்வி சுற்றுலா செல்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 12 நாள்கள் நீளும் எங்கள் சுற்றுலாவில் கொல்கத்தா, டார்ஜிலிங், கேங்க்டக் (இமய மலையின் அடிவாரப் பகுதிகள் மற்றும் சிகரங்கள்) என்று புதிய, புதிய இடங்களை முதன் முறையாக சுற்றிப் பார்க்க இருக்கிறோம். இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த தாளாளர் அவர்களுக்கும், எங்களுக்கு அனுமதி அளித்து வழியனுப்பும் பெற்றோர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். 





நம் இளைய தலைமுறை மாணவர்கள், இது போன்ற கல்விச் சுற்றுலாக்கள் மூலம், பல்வேறு கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், வித்தியாசமான் மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழிடங்கள், உடைகள், நடைமுறை பழக்க வழக்கங்கள், மொழிகள் என்று அறிந்து கொள்வதற்கும், ஏட்டளவில் மட்டுமில்லாமல், ஆத்மார்த்தமாய், மனதில் உள் வாங்கிக் கொள்வதற்கும், பேருதவி புரிகிறது. ஆகவே நம் கீழக்கரை நகரின் ஏனைய பள்ளிகளும், கல்லூரிகளும் ஆண்டுக்கு ஒரு முறை தங்கள் மாணவர்களை கல்விச் சுற்றுலாக்களுக்கு அழைத்து செல்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். 

இஸ்லாமியா பள்ளி மாணவர்களின், இந்த கல்விச் சுற்றுலா இனிதே சிறப்புற, கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனவார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 


2 comments:

  1. En arumai marumagankalukkum matrum aenaiyae maanavarkalukkum vaalththukkal, Paathugaappavarkalilellaam Allah Melaanaavan, avanae maanavachchaelvangali paththiramaaga aananthaththudan thirumba konduvaruvatharkku poathumaana van.
    ReplyDelete
  2. எந்தன் அன்பிற்கினிய இஸ்லாமிய பள்ளியின் தம்பிமார்களின் கல்விச் சுற்றுலா இனிதாய் அமைய நல் வாழ்த்துகள். அவர்கள் எந்தவிதமான பிரச்சனைக்கும் ஆட்படாமல் நலமாய் ஊர் திரும்ப வல்ல ரஹ்மானிடம் இரு கரம் ஏந்தி துவா செய்கிறோம்..

    நல்ல முயற்சி. நீண்ட பயணம். நூறுக்கு ஒன்று குறைவான நபர்கள். மலைப்பு தருகிறது. ஏக நாயன் அவனின் சகல பாதுபாப்பையும் அவர்களின் மீது நல்குவானாக. ஆமீன். ஆமீன். யாரப்பில் ஆலமீன்.

    சுட்டி காட்டுவதற்கு மிகவும் வருந்துகிறோம்..பயணம் திட்டமிட்டதில் சிறு குறை ஏற்பட்டு விட்டதாக கருதுகிறோம்.. அதுவும் நம்மை போன்று டிராபிக்கல் ஏரியாவில் வாழும் சிறுவர்களுக்கு டார்ஷிலிங், கேங்டாங்க் செல்ல ஏற்ற நேரமில்லை.. நவம்பர் ,டிசம்பர் மாதங்களில் அங்கு குளிர் மைனஸ் டிகிரியில் இருக்கும். அதுவும் இமயமலையின் அடிவாரம்.. பிரதேசம் முழு வெள்ளியை உருக்கி ஊற்றிய்து போல பனி படர்ந்திருக்கும். சிறுவர்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும்..அதிகாலையில் அவசரத்திற்கு நீர் கிடைக்காது. பனிக் கட்டிகள் தான் இருக்கும்.. பன் முறை அந்த பகுதியில் பயனித்தவன் என்ற முறையில் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறோம்..

    நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்க இரு கரம் ஏந்தி படைத்து காகும் ரப்பில் ஆலமீனிடம் துவாச் செய்வோமாக. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆகமீன்..

Face Book Comments:

  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' இறைவனின் துணை கொண்டு, மகிழ்வுடன் சென்று, புதுப் புது நல்ல செய்திகளை அறிந்தவர்களாக, அறிவார்ந்தவர்களாக திரும்ப வாருங்கள்...
    5 hours ago · Like · 2
  • Riffan Zyed Happy Journey with Allah's grace
  • Mohamed Rafi Ar HAPPY AND SAFE JOURNEY MY BROS..............
  • Fouz Ameen நல்லா சந்தோசமா போயிட்டு வாங்க தம்பிகளா
    4 hours ago · Like · 1
  • Abdul Rahman உலகில் எத்தனை நாடுகள் சுற்றி வந்தாலும், ஒருவரின் மனதில் என்றும் பசுமையாக பதிந்து நிலைத்து இருப்பது, பள்ளிக்கூட (நாட்களில்) நண்பர்களுடன் சென்று வரும் சுற்றுலா மட்டுமே!! 
    இவர்களின் இந்த பயணம் இனியதாகவும், பாதுகாப்பானதுமாக அமைய இறைவன் அருள் புரிவானாக!!!
    3 hours ago · Edited · Unlike · 2
  • ஹஸன் அலி Guys whatever you do "safety first"...do not get off your train anywhere alone. Before leave your camp ensure leave information. Do not wear expensive & gold old ornaments might put you in risk. keep your cell phones always charged. Gear up and enjoy guys..I really feel your happiness..........Enjoy
    2 hours ago · Unlike · 1
  • Waji Buddycool அல்லாஹ் உன் காவல்
    2 hours ago · Like · 1
  • Sahul Hameed ALLAH WILL PROTECT YOU ALL
  • Mohamed Irsath உங்கள் பயணம் நல்ல படி அமைய வாழ்த்துகள் அல்லா துணை நிப்பான் ஆமீன்

3 comments:

  1. En arumai marumagankalukkum matrum aenaiyae maanavarkalukkum vaalththukkal, Paathugaappavarkalilellaam Allah Melaanaavan, avanae maanavachchaelvangali paththiramaaga aananthaththudan thirumba konduvaruvatharkku poathumaana van.

    ReplyDelete
  2. எந்தன் அன்பிற்கினிய இஸ்லாமிய பள்ளியின் தம்பிமார்களின் கல்விச் சுற்றுலா இனிதாய் அமைய நல் வாழ்த்துகள். அவர்கள் எந்தவிதமான பிரச்சனைக்கும் ஆட்படாமல் நலமாய் ஊர் திரும்ப வல்ல ரஹ்மானிடம் இரு கரம் ஏந்தி துவா செய்கிறோம்..

    நல்ல முயற்சி. நீண்ட பயணம். நூறுக்கு ஒன்று குறைவான நபர்கள். மலைப்பு தருகிறது. ஏக நாயன் அவனின் சகல பாதுபாப்பையும் அவர்களின் மீது நல்குவானாக. ஆமீன். ஆமீன். யாரப்பில் ஆலமீன்.

    சுட்டி காட்டுவதற்கு மிகவும் வருந்துகிறோம்..பயணம் திட்டமிட்டதில் சிறு குறை ஏற்பட்டு விட்டதாக கருதுகிறோம்.. அதுவும் நம்மை போன்று டிராபிக்கல் ஏரியாவில் வாழும் சிறுவர்களுக்கு டார்ஷிலிங், கேங்டாங்க் செல்ல ஏற்ற நேரமில்லை.. நவம்பர் ,டிசம்பர் மாதங்களில் அங்கு குளிர் மைனஸ் டிகிரியில் இருக்கும். அதுவும் இமயமலையின் அடிவாரம்.. பிரதேசம் முழு வெள்ளியை உருக்கி ஊற்றிய்து போல பனி படர்ந்திருக்கும். சிறுவர்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும்..அதிகாலையில் அவசரத்திற்கு நீர் கிடைக்காது. பனிக் கட்டிகள் தான் இருக்கும்.. பன் முறை அந்த பகுதியில் பயனித்தவன் என்ற முறையில் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறோம்..

    நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்க இரு கரம் ஏந்தி படைத்து காகும் ரப்பில் ஆலமீனிடம் துவாச் செய்வோமாக. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆகமீன்..

    ReplyDelete
  3. அல்லாஹ் உன் காவல். பீஆமாநில்லாஹ்

    ReplyDelete