தேடல் தொடங்கியதே..

Saturday 4 February 2012

IAS தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு - கீழக்கரை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுகோள் !

இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), இந்தியா அயல் நாட்டுப் பணி (IFS) மற்றும் 28 வகையான மத்திய பணிகளுக்குப் பணியாளர்களை தேர்ந்தேடுப்பதற்கான இந்த ஆண்டின் (2012) குடிமை பணிகள் (சிவில் சர்வீஸ்) தேர்வை வரும் மே மாதம் 20 ஆம் தேதி (20.05.2012) மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் இந்த தேர்வு ஒரே நாளில் நடைபெறும். தென் மாவட்டத்தில் இந்த தேர்வு மதுரையில் நடை பெற உள்ளது. இதற்கான அறிவிப்பினை மத்திய பணியாளர் தேர்வாணையம் இன்று (04.02.2011) அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.03.2012




நம் இராமநாதபுரம் மாவட்டத்தில், குறிப்பாக நம் கீழக்கரையில், பத்தாம் வகுப்பு முடித்து விட்டால்,  அடுத்து பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டு வேலைக்கு பறப்பது தான் காலம் காலமாக நடந்து வருகிறது. தற்போது நம் பிள்ளைகள் ஓரளவுக்கு கல்லூரிகளில் கால் பதித்து பட்டதாரிகள் ஆகி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இருந்தாலும் கூட, அவர்களும் வெளி நாட்டு வேலை வாய்ப்பையே முழுதாய் நம்பியுள்ளனர். நம் மண்ணிலேயே அரசாங்க உயர் பதவிகளுக்கு யாரும் முயற்சி செய்வது கிடையாது. அதை பற்றியான எந்த ஒரு விழிப்புணர்வும் அவர்கள் மத்தியில் இல்லை.

நம் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கூட அரசாங்க வேலை வாய்ப்புகள் பற்றி சொல்லி கொடுப்பது இல்லை. ஒரு சில மாணவர்களிடம் மட்டும் "நான் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும்.. நான் ஐ.பி.எஸ் ஆக வேண்டும்.." என்ற கனவுகள் இருந்தாலும் கூட, அவர்களுக்கு  சரியான வழிகாட்டுதல்கள் இல்லாத காரணத்தால், அது கனவாக மட்டுமே கரைந்து விடுகிறது. ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டுமென்றால், எங்கே அதற்கான விண்ணப்பம் கிடைக்கும் ? என்று கூட தெரியாத நிலையே இன்றும் இருந்து வருகிறது.

ஆகவே இனியும் இந்த அரசாங்க வேலைவாய்ப்புக்கான தேர்வுகளை நழுவ விடாமல், முறையாக பயன்படுத்தி கொள்ள, ஆர்வம் கொண்ட அனைவரும் கீழை இளையவன் ஐ.ஏ.எஸ் வழிகாட்டி தளத்தினில், இணையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம.

கீழை இளையவன் ஐ.ஏ.எஸ் வழிகாட்டிஇனைய தள முகவரி :http://www.keelaiilayyavanias.blogspot.in/

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இனைய தளத்திலும், தேர்வுக்கான அறிவிப்பு செய்தியை பார்வையிட்டு, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இனைய தள முகவரி http://www.upsc.gov.in/
 

Friday 3 February 2012

கீழக்கரையில் 'குப்பைக்கு குட்பை' சொல்ல சமூக ஆர்வலர்களின் பல் முனை முயற்சிகள் !

கீழக்கரை நகரின் தற்போதைய முக்கிய பிரச்சனையாக, எல்லோராலும் பேசப்பட்டு வரும் இந்த குப்பை பிரச்சனையில் கீழக்கரை நகராட்சி, வெல்பேர் அசோசியேசன் தொண்டு நிறுவனம் தவிர இந்த குப்பை பிரச்சனையை தீர்ப்பதற்காகவே கீழக்கரை நல சங்கம் என்ற புதிய அமைப்பினை ஏற்படுத்தி, குப்பை பிரச்சனைகளை களைய பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அது போலவே கீழக்கரையில் கடந்த 01.02.2012 அன்று கீழக்கரை பைத்துல் மாலில் நடைபெற்ற குத்பா கமிட்டி கூட்டத்திலும், இந்த குப்பை பிரச்சனை விவாதிக்கப்பட்டு, சிறப்பான தீர்மானங்களை எடுத்துள்ளனர்.






இவை எல்லாவற்றிற்கும் மணிமகுடமாக இந்த குப்பை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வினை காண, கீழக்கரை மேலத்தெருவைச் சேர்ந்த ஜனாப். அஹமது லாபீர் அவர்கள் சென்ற மாதம் சதக்கத்துல்லா அப்பா வளாகத்தில் எக்ஸ்னோரா என்ற தொண்டு அமைப்பினரை அழைத்து வந்து, மாவட்ட கலெக்டர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் ஒரு கலந்தாய்வு கூட்டத்தை சிறப்பாக நடத்தினார்கள்.

இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி 
http://www.keelaiilayyavan.blogspot.in/2012/01/blog-post.html 

கீழக்கரை நகரை தூய்மையாக்குவதின்  தொடர் முயற்சியாக கீழக்கரை தாசீம் பீவி மகளிர் கல்லூரியில் நேற்று (02.02.2012) மதியம் மணியளவில் செயல் திட்ட முன் மாதிரி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் முஹம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற மதுரை மாநகராட்சி முன்னாள் கமிஷனர் திரு. நாகராஜன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.






இதில் குப்பைகளை கையாள்வது சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சிறப்பாக விவாதிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், கல்லூரி முதல்வர்களும் நடைமுறைபடுத்த இருக்கும் செயல் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற தங்களுடைய முழு ஆதரவையும் தருவோம் என்று ஒற்றை குரலில் உறுதி மொழி அளித்தனர்.






இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மேலத்தெருவைச் சேர்ந்த அஹமது லாபீர் அவர்கள் பேசுகையில், "நம் கீழக்கரை நகராட்சியில் நாளொன்றுக்கு சுமார் 30 டன் முதல் 35 டன் வரை குப்பைகள் சேர்கின்றது. இதனால் கொட்டப்படும் குப்பைகள் மலை போல் குவிந்த விடுகிறது. இவற்றை தவிர்க்க நாம் வீடுகளிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து விடும் போது நம்மால் 'WASTE MANAGEMENT' என்று சொல்லக் கூடிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சிறப்பாக குப்பைகளை கையாள முடியும். 






இந்த நல்ல திட்டத்திற்கு தாய்மார்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் தேவைப்படுகிறது. இதன் முதல் கட்டமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மதரசாக்களில் பயிலும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களை கொண்டே இந்த திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுக்க இருக்கிறோம். நம் கீழக்கரையில் ஏறத்தாழ 22 கல்வி நிறுவனங்கள் உள்ளது. இந்த கல்வி கூடங்களில் பக்கத்து ஊர்களில் இருந்து இங்கு வந்து கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தவிர கீழக்கரையை சார்ந்த மாணவ, மாணவிகள் மட்டும் 4000 பேர் படிக்கின்றனர். இந்த மாணவ மணிகளின் மேலான பங்களிப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்", என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் தெரிவித்தார். 




கீழக்கரை வாழ் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து, நம் கீழக்கரை நகராட்சியை குப்பைகள் இல்லாத நகரமாக, மத்திய மாநில அரசுகளின் 'முன் மாதிரி நகராட்சி விருதுகளை பெறக் கூடிய சிறப்பான நகராக மாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அல்லது இது போன்ற நல்ல முயற்சிகளை எடுப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

Thursday 2 February 2012

கீழக்கரையில் இன்று முதல் பாலிதீன் தடை அமுலாக்கம் - பொதுமக்கள் மகிழ்ச்சி

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு  நம் கீழக்கரை நகராட்சியில், நகரின் சுகாதாரத்தை முன்னிறுத்தி 2-2-2012 முதல் பாலிதீன் விற்பனைக்கான தடை விதிப்பு அமலுக்கு வருமென்று ஒருமனதாக முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்ப்பை பெற்றது.
 
 
கீழக்கரை முஸ்லீம் பஜாரில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை


கீழக்கரை மக்கள் எல்லோராலும் பெரும் ஆவலுடன் எதிர் பார்க்கபட்டு கொண்டிருந்த இந்த பாலிதீன் ஒழிப்பு தினமான இன்றிலிருந்து பாலிதீன் பொருள்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் உபயோகத்திற்கான தடை, நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடைமுறை படுத்தபடுகிறது. 


 இது குறித்து ஏற்கனவே நாம் வெளியிட்டிருந்த செய்தி  (Kindly Click the blow Link ) http://www.keelaiilayyavan.blogspot.in/2012/01/02022012.html
 
 


இது குறித்து கீழக்கரை நகராட்சித் தலைவர் ராவியத்துல் கதரியா அவர்களை நகராட்சி அலுவலகத்தில் சந்தித்து கேட்ட போது, "இந்த நல்ல முயற்சிக்கு கீழக்கரையின் அனைத்து தரப்பு மக்களும், உறுதுணையாக இருந்து தங்கள் முழு ஒத்துழைப்பையும் தர வேண்டும். இந்த பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணி பைகள், காகிதத்தாலான பைகள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் நம் கீழக்கரை நகரை தூய்மை நகரமாக மாற்ற எங்களுக்கு உதவ வேண்டும். எங்களுக்கு  இது சம்பந்தான ஆலோசனைகளை, கருத்துக்களை பொது மக்களும், சமூக நல ஆர்வலர்களும் தயங்காமல் தர முன் வர வேண்டும்." என்று தெரிவித்தார்.
 
 
கீழக்கரை V.A.O அலுவலகம் அருகில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை

எத்தனை சட்டங்கள் போட்டாலும், திட்டங்கள் தீட்டினாலும், தடைகளை போட்டாலும் பொது மக்கள் ஒத்துழைப்பின்றி, ஆதரவின்றி இது போன்ற சிறப்பான தீர்மானங்கள் வெற்றியின் சிகரத்தை, எட்டி பிடித்து விட முடியாது. ஆகவே நம் கீழக்கரை நலனில் அக்கறை கொண்டு நகராட்சி எடுக்கும் நல்ல தீர்மானங்களுக்கு, கருத்து வேறுபாடுகளை களைந்து, அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்பது தான் அனைவரின் ஆவலும், ஆசையும், விருப்பமும்...

Wednesday 1 February 2012

கீழக்கரையில் வபாத்து அறிவிப்பு !

கீழக்கரை நெய்னா முகம்மது தண்டையல் தெருவைச் சேர்ந்த ஜனாப். நெய்னா  முஹம்மது என்கிற 'சம்மாட்டி மாமா' அவர்கள் நேற்று (31/01/2012) அதிகாலை 4 மணிக்கு வபாத்தாகி விட்டார்கள்.


(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்). 

அவர்களின் ஜனாஸா நல்லடக்கம், கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் இன்று காலை 11 மணியளவில் நடை பெற்றது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.