தேடல் தொடங்கியதே..

Thursday 3 October 2013

கீழக்கரையில் கம்பீரமாக காட்சி தரும் நூற்றாண்டை கடந்த பழம் பெரும் வீடுகள் - பகுதி 1

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருந்து மீன் கடை செல்ல திரும்பும் வழியில் கம்பீரமாக காட்சி தரும் இந்த பழம் பெரும் வீட்டினை கடந்து செல்பவர்கள் ஒரு கணம் நின்று, வீட்டில் வெளிப்புற அழகை கண் இமைக்காமல் பார்த்து செல்வதை இன்றும் காண முடிகிறது. போர்த்துகீசிய கட்டிடக் கலை வடிவமைப்பில் கட்டப்பட்டிருக்கும் இந்த வீட்டின் முகப்பு அழகிய வளைவுகளால் அமைக்கப்பட்டு இருக்கிறது. 







நூற்றாண்டைக் கடந்து நிற்கும் இந்த வீட்டின் உட்புறம் முழுவதும் தேக்கு மரத்தினால் ஆன தூண்கள் நிறைந்து காணப்படுகிறது. அவற்றில் அழகிய கண் கவர் வேலைப்பாடுகள் அதிகளவில் உள்ளது. கீழக்கரை கஸ்டம்ஸ் சாலையில் இருந்த பழம் பெரும் 'பீனா செனா' கிட்டங்கியின் உரிமையாளர் மர்ஹூம். பீனா செனா செய்யது அபுதாஹிர் (லிட்டரி கிளப் 'P.S.மாமா' என்று அன்போடு அழைக்கப்படும் அப்துல் மஜீது அவர்களின் தந்தையார்) அவர்களுடைய பூர்வீக இல்லம் இது என்பது குறிப்பிடத்தக்கது.  

பொறுத்திருங்கள்.. பழமைகள் பேசுவோம்.. (தொடரும்)

1 comment: