தேடல் தொடங்கியதே..

Thursday 24 October 2013

கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் திடீரென சிலாப் இடிந்து விழுந்ததால் பரபரப்பு !

கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் கனி ஒர்க் ஷாப் கட்டிடத்தில் இன்று (24.10.2013) மாலை 6.30 மணியளவில் திடீரெனெ சிலாப் இடிந்து விழுந்தது. இதில் கட்டிடத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தள்ளு வண்டி அப்பளம் போல் நசுங்கியது. இறைவன் அருளால், இந்த விபத்து ஏற்பட்ட சமயத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 


கீழக்கரையில் கடந்த சில தினங்களாக சிதிலமடைந்த கட்டிடங்களில் இருந்து சிமிண்டு சிலாப்புகள் பெயர்ந்து விழுந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் உயிருக்கு பாதகமாக இருக்கும் பழைய கட்டிடங்களை உடனடியாக இடிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். 



இது குறித்து நாம் வெளியிட்டிருந்த பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.

கீழக்கரையில் பால்கனி சிலாப் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் படுகாயம்!


கீழக்கரையில் ஆபத்தான நிலையில் இருக்கும் பழைய கட்டிடங்களை இடிக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் !

No comments:

Post a Comment